இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், வங்காளதேசத்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்தார்.
அந்த ஆட்டத்தின் போது ஷேவாக் அணிந்திருந்த பனியனில், நம்பர் எதுவும் இல்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு வீரர் களத்தில் இருக்கும் போது நம்பர் பொறிக்கப்பட்ட உடையையே அணிய வேண்டும். ஷேவாக் இதனை மீறியதால், இதனை குறிப்பிட்டு அவருக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த ஆட்டத்தின் போது ஷேவாக் அணிந்திருந்த பனியனில், நம்பர் எதுவும் இல்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு வீரர் களத்தில் இருக்கும் போது நம்பர் பொறிக்கப்பட்ட உடையையே அணிய வேண்டும். ஷேவாக் இதனை மீறியதால், இதனை குறிப்பிட்டு அவருக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஷேவாக்குக்கு ஒதுக்கப்பட்ட எண் 44. அதனை தனது பனியனில் இருந்து நீக்கிவிட்டு நம்பர் ஏதுமின்றி விளையாடி இருக்கிறார். நம்பர் இல்லாமல் விளையாடினால் நிறைய ரன்கள் குவிக்க முடியும் என்ற மூட நம்பிக்கை ஷேவாக்கிடம் உண்டு.
அதே சமயம் அவரை தவிர மற்ற இந்திய வீரர்கள் அனைவரும், எண்கள் பொறிக்கப்பட்ட பனியனையே அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் அவரை தவிர மற்ற இந்திய வீரர்கள் அனைவரும், எண்கள் பொறிக்கப்பட்ட பனியனையே அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments to "நம்பர் பொறிக்கப்படாத பனியன்: ஷேவாக்குக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை"